விழுப்புரத்தில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் மர்ம நபர்கள்.! 

0 12526

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சித்தேரிபட்டு கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி என்பவர் தனக்கு சொந்தமான hero splendur plus வாகனத்தை வீட்டிற்கு வெளியே நிறுத்திவிட்டு உள்ளே தூங்கியுள்ளார்.

இந்நிலையில், நள்ளிரவில் அந்த வழியாக நடந்து வந்த மர்ம நபர் ஒருவன் பூட்டை உடைத்து இருசக்கர வாகனத்தை வெளியே தள்ளிக்கொண்டு வந்து, பின்னர் தன்னுடன் பைக்கில் வந்த 5 கூட்டாளிகளுடன் அங்கிருந்து தப்பிச் சென்றான்.

சின்னத்தம்பி அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த கண்டாச்சிபுரம் போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு அந்த 5 மர்ம நபர்களையும் தேடி வருகின்றனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments